பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

39


தான் செய்த பாவங்களுக்காக உடலை இரு கூறாக்க நரகத்தின் பலிபீடத்துக்குக் கொண்டு வரப்பட்டார் துறவி. இதனைக் கண்டு அவரது தொண்டன் ஓடிச்சென்று துறவியிடம் விளக்கம் கேட்டார். விளக்கம் தந்தார் துறவி. "உனக்குப் புரியாது மண்ணுலகில் பெளத்த மடங்களும், துறவிகளும் நாளுக்கு நாள் குறைந்து வருவதை உணர்ந்த, நரக உலகின் அதிபதி, இறந்துபோன ஒவ்வொரு துறவியையும்

இரண்டாக வெட்டி, துறவிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்க ஆசை கொண்டு என்னை இவ்வாறு இரண்டாகப் பிளக்கப் போகிறார் என்றார். துறவி விளக்கம் கேட்டும், அவர் வெட்டப்படுவது கண்டும் விழி பிதுங்க வியப்புடன் நின்றார் தொண்டர்.