பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர்.த.கோவேந்தன், டிலிட்.,

53




52. மகன் தந்தைக்காற்றும் கடன்

நோயாளி ஒருவருக்கு மருத்துவம் செய்ய மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட்டார். ஆய்வுக்குப் பின், நிலமை மிகவும் இழிநிலையில் இருப்பதைக் கண்டார் மருத்துவர். நோயாளியின் மகனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்து நோயாளிக்கு உண்பதற்குக் கொடுத்தால்தான் குணமாகும் என்றார் மருத்துவர்.

நோயாளியின் மகன் இதோ தசையினை விரைவில் கொண்டு வருகிறேன் என்றான்.