பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

61


அணுகி “சிறுவன் யார்?” என்று கேட்டார். தந்தை சொன்னார் “அரசுக்கு மிகவும் வேண்டப்பட்ட உள்துறை அமைச்சர் ஒருவரின் குடும்பத்தின் நேரிடை வழி வந்த ஒன்பதாவது தலைமுறைப் பேரனின் மருமகனாக வாய்த்த இவன் என் மகன் ஆவான்” என்றார்.

60. பட்ட கடன் அத்தனையும்
மறுபிறவியில்

செல்வர் ஒருவரிடம் மிகப்பலர் கடன்பட்டிருந்தனர். தம்மிடம் கடன்பட்ட அனைவரையும் அழைத்து, மறுபிறவியில் தற்போது வாங்கிய கடனை தருவதாக வாக்களித்தால் இப்பிறவியில் அனைவரின் கடனையும் தள்ளுபடி