பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


செய்வதாகச் சொன்னார் அந்தச்செல்வர். இதனைக் கேட்டு அவரிடம் கடன் பெற்றோர் அனைவரும் அகமகிழ்ந்தனர்.

முதலாம் ஆள் “அடுத்தப் பிறவியில் நான் குதிரையாகத் தோன்றி, உங்களைச் சுமந்து சென்று, நான்பட்ட கடனைத் தீர்க்கிறேன்” என்று வாக்களித்தான். உடனே செல்வர் அவன் கடன் ஆவணத்தை எதிரில் நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினார்.

இரண்டாம் ஆள் சொன்னான் “இப்பிறவியில் நான் உங்களுக்குப்பட்ட பெரும் கடனுக்காக, மறுபிறவியில் காளையாய்ப் பிறந்து, உங்களுக்கு உழைத்து உழைத்து மடிவேன்” என்று. அவனது கடன் ஆவணத்தையும் நெருப்பிலிட்டார் செல்வர்.

இவ்வாறு ஒவ்வொருவராக வாக்களித்தனர். இறுதியில் ஒருவன் “பட்ட கடனைத் தீர்க்க அடுத்தப் பிறவியில் நான் உங்கள் தந்தையாகப் பிறக்க விரும்புகிறேன்” என்றான். இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட செல்வர். உனக்கு எவ்வளவு ஆணவம் இருந்தால் இப்படிக் கூறுவாய் நீ, வாங்கிய கடனோ அளவுக்கதிகமானது. என்னை அவமானப்படுத்தவே நீ முயல்கிறாய் என்று கூறி அவனை ஓங்கி அறையச் சென்றார். உடனே அந்த ஆள், “ஐயா, சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள். நான் உங்களுக்கு அதிகமாகக் கடன்பட்டிருப்பது உண்மைதான். மற்றவர்களைப் போல் குதிரையாகவோ காளையாகவோ பிறந்து உங்களுக்கு உழைத்து என் கடனைத் தீர்க்க முடியாது. எனவேதான் உங்கள் தந்தையாகத் தோன்றி, சிக்கனமாக வாழ்ந்து, செல்வத்தைச் சேமித்து ஒன்றையும் நுகராமல், வீடு, வாசல், நிலபுலம், காடு, கரை என்று ஏராளமாகத் தேடி வைத்து விட்டு நான் சாவேன். இப்படிச் செய்வதால் மட்டுமே நான்