பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

77


காரனோ புகையை மட்டுமே வெளியேற்றுகின்றார். அவனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றே அஞ்சுகிறேன்” என்றார் செல்வர். செய்வதறியாது திகைத்தார் நண்பர்.

73. விடை சொல்லும் பாங்கு

விடை சொல்லும் பாங்கினைப் பற்றிப் பக்குவமாய்த் தம் மகனுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ஒருவர். புரியாது விழித்துக் கொண்டிருந்த மகன் புரியும்படி சொல்லுங்கள் என்று விளக்கம் கேட்டான். அந்த நேரம் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒன்றை இரவலாகப் பெற்றுச் செல்ல அங்கு வந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தந்தை சொன்னார் “யாராவது