பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


நான் நூறு காணி வாங்கிவிடுவேன் என்று ஒருவனும், அவற்றின் விளைச்சலை பல இலக்கம் சேர்த்து நான் வாங்கிவிடுவேன் என்று மாறிமாறிப் பேசினர். இருவரும் தங்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துச் செல்ல முடிவு செய்து பட்டணம் சென்றனர். இருவருமே அதுவரை பட்டணம் சென்று நீதிமன்றத்தைப் பார்த்து அறியாதவர்கள். எனவே செல்லும் வழியில் ஒரு சிவப்பு நிறக் கட்டிடத்தைக் கண்டு அது தான் நீதிமன்றம் என நினைத்து உள்ளே நுழைந்தனர். அந்தக் கட்டிடமோ அறிஞர் பூங்குன்றனின் மெய்மை ஆய்வுக் கூடமாயிருந்தது. பல மாணவர்களும் அறிஞர்களும் அங்குத் தங்கி ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் செல்லும் வேளையில் அம் மண்டபத்தின் முகப்பில் அறிஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் நீதிபதி என நினைத்து, சிற்றூர்க்காரர் இருவரும் தங்கள் வழக்கையுரைத்தனர். வழக்கைக் கேட்டபின் அறிஞர் சொன்னார், “முதலில் நீங்கள் இருவரும் அவரவர் சம்பாதிக்க நினைப்பதைச் சம்பாதியுங்கள். நானும் நீதிபதியானவுடன் என் தீர்ப்பைச் சொல்லுகிறேன்” என்று.


76. தோலைக் கெடுத்துவிடாதே

புலிவாயில் விழுந்த ஒரு மனிதனைக் காக்க அவன் மகன் கத்தி ஒன்றினை எடுத்துப் புலியினைக் குத்திக் கொல்லப் பாய்ந்து வந்தான். பாய்ந்து வரும் மகனைப் பார்த்துப் புலி வாயில் அகப்பட்ட மனிதன் “மகனே, ஆத்திரப்பட்டுப் புலியின் மீது கண்டவிடத்தில் குத்தி அதன் தோலினைச் சேதப்படுத்தி விடாதே. அதன் காலடியிலிருந்து வெட்டத் தொடங்கிப் பின்னர் அதன் உடலினைப் பிளந்துவிடு.” என்று ஆய்வுரை கூறினான்.