பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


முட்டைக்குச் சிறப்பான மணமோ, சுவையோ இல்லை என்றுதான் நான் இந்நாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்த முட்டைகள் சுவையாகவும் உப்பாகவும் இருக்கின்றனவே” என்றான். “நல்லவேளை இந்த உண்மையை நீ கண்டுபிடிக்கும் போது என்னோடு இருக்கிறாய். நான் உனக்கு முழு உண்மையையும் விளக்குகிறேன். எனெனில் எனக்கு அவற்றைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த முட்டைகள் உப்புக் கோழிகளிடமிருந்து கிடைக்கிறது, எனவே தான் உப்பாயிருக்கிறது” என்று விளக்கம் தந்தான் முன்னவனுக்குப் பின்னவன்.

89. தவறான மருத்துவம்

நோயாளியை ஆய்வுசெய்த மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டார். ஆய்வுசெய்தபின் மருத்துவர் சொன்னார் “பயப்படும்படி எதுவுமில்லை, எனினும் முழு ஓய்வு தேவை. சில நாள்கள் படுக்கையில் ஓய்வெடுப்பது நல்லது” என்று. ஆனால் சில நாள்களுக்குள்ளாகவே அந்த நோயாளி இறந்துவிட்டார். சினமுற்ற நோயாளியின் குடும்பத்தினர் தங்கள் வேலைக்காரனை அனுப்பி மருத்துவரை வசைபாடி விட்டு வரும்படி அனுப்பினர்.

வேலைக்காரனோ சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தான். “என்ன, அவரை நன்றாக வசைபாடினாயா?” என்று கேட்டனர். “இல்லை" என்றான் அவன். “ஏன்?” என்றனர் அவர்கள். அவன் சொன்னான் “மருத்துவரைச் சூழ்ந்து பெரும் கூட்டம் நின்று பல்வேறு வகைகளில் அவரை அனைவரும் வசைபாடிக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தை விலக்கி அருகில் சென்று அவரை வாயார வசை-