பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ias சிரிக்க வைக்கிறார். கி.வா.ஜ

வீட்டுக்கு வம் என - முத்தியை அடைய வாரும் என்று மோகையில் மோகனூரில், சிகரி - மலை. ஆட்டுக்கும் சங்கு இவள் பாட்டுக்கும் என்னை அமை தொடர்பே - பல் கொடுக்கும் ஆட்டுக்கும் இங்கே இந்தத் தலைவி படும் துன்பத்திற்கும் அமைந்த தொடர்பு யாது? பாடு - துன்பம். -

இந்த ஆட்டத்துக்கும் இவள் படும் பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று வேறு ஒரு பொருள் தொனித்தது. -

வாய்மை - பொய்ம்மை

காய்மலம் நீக்கிக் கருணையி லாழ்ந்திடக் காந்தமலை - மேய பிரானை வழிபடும் தோன்றலை

வேட்டுநின்றாள் து.ாய்மையை அன்பை நினைந்தில ளேஅன்னை சூழ்வெறியில் வாய்மையைக் கொல்ல விரும்பினள்

பொய்ம்மை மனத்தினளே. காய் மலம் - துன்புறுத்தும் மும்மலங்களை. தோன்றலை - தலைவனை. வேட்டு நின்றாள் - விரும்பி அந்த நிலையில் தளராது நின்ற தலைவியினுடைய. சூழ் வெறியில் - செய்கின்ற வெறியாட்டில். வாய்மையைக் கொல்ல விரும்பினள் பலி கொடுப்பதற்காக வாய்த்த ஆட்டைக் கொல்ல விருப்பம் கொண்டன்ஸ். பொய்ம்மை மனத்தினளேபொய்யை எண்ணிய மனத்தையுடையவள்.

மிக்க வெறியினால் சத்தியத்தைக் கொல்ல விரும்பினாள் என ஒரு பொருள் தொனித்தது. வாய்மை-வாய்த்த ஆடு, சத்தியம். -

8