இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12. செந்தாமரை வாழ்க! செந்தா மரையொன்று பூத்தது! பூத்தது தென்னிலங்கை! செந்தா மரைவாழ்க! தீந்தமிழ் வாழ்க! திசைபலவும் செந்தா மரைமுகச் சேல்விழிக் கன்னியர் காளையரும் நந்தமிழன்னை நறுந்தமிழ்க் காக்கம் நவிலுகவே! இன்றைய பிள்ளைகள் நாளைய வீரர்! இயலிசைகூத் தொன்றிய அன்னை மொழிவளர் நாட்டை உயர்த்துதற்கே பொன்றுத லில்லா உடல்வளம் கல்வி புதுப்புகழை என்றும் எழுப்புக! தாயக நாட்டை எழுப்புகவே! நலன்பல துய்த்தோம்! நமதரும் பங்கையிந் நல்லுலகும் இலையெனில் ஏசும்; மனத்திடை யெண்ணி இயன்றளவு பலன்பெறச் செய்க! மொழிவளம் போற்றுக! பண்புடைய தலைநிமிர் வாழ்வும் வளனும் தருந்தமிழ் போற்றுகவே! 85