இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி, சுந்தரம்
99
சித்ரா : அவ அம்மாவைப் பார்க்கப் போனவ அங்கேயே
- இருந்துட்டா! அப்பவே சொன்னேன். போகாதே
- பேசாதேன்னு தலைகீழே நின்னேன்! பாட்டி
- வார்த்தையை மீறிப்போனா. மாதவி என்னமோ
- சொல்லி பொண்ணு மனசை மாத்திட்டா
- போலிருக்குங்க! ஐயோ! இளவரசே, இனிமே
- எப்படி உயிர் வாழ்வேனுங்க?
உதய : கவலை வேண்டாம்!
சித்ரா : எனக்காக நான் கவலைப்படலீங்க! பாவம் நீங்க
- அவமேலே உயிரையே வெச்சிருந்தீங்களே!
- உங்களை நெனைச்சா என் உடம்பெல்லாம்
- எரியுதுங்க! நீங்க உடனே போய் அழைக்காட்டா
- அவ சன்யாசியாயிடுவாங்க அப்புறம் நீங்களும்
- சன்யாசி ஆகணுங்க!
உதய : என்ன சந்யாசியாவதா? என் மேகலையா?
- பெரியதொரு சரித்திரத்தையே உருவாக்கப் பிறந்த
- பைந்தமிழ்ப் பாவை! என் பிரேமைப் புதுமலர்,
- பக்தியெனும் பாலைவனத்தில் பட்டு, சருகாக
- நான் சம்மதிக்க மாட்டேன்! பளிங்குச்சிலை,
- பாறையிலே மோதித் தூளாகப் பார்த்துக்
- கொண்டிருப்பது அநியாயம்! அக்கிரமம்! இதோ
- போகிறேன். வரும்போது இருவரும் வருவோம்.
(உதயகுமாரன் வேகமாகப் போகிறான்)
சித்ரா : மனுசன் போற வேகத்தைப் பார்த்தா...
மாமா : தடுக்கி விழுந்திடாமப் போகணும். பார்க்கலாம்.
- உம். அம்மா மாதவி கல்யாணம் ஆகியும் சன்
- யாசி... மகள் ::கல்யாணம் ஆகாமலே சன்யாசி
- யாயிட்டா. பார்க்கலாம்! ஏ? உலகமே? நீயே ஒரு
- சன்யாசி ஆயிட்டா என்ன?