இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
சிரிப்பதிகாரம்
- கதை ஒரு களங்கமாக இருக்க நான் விரும்ப
- வில்லை.
உதய :மேகலா வேண்டாம் விபரீதம் விளைந்து விடும்;
- மேகலை என்ற பெண் தன்னை நிராகரித்த
- தால் உதயகுமாரன் என்ற இளவரசன் தற்
- கொலை செய்து கொண்டு, பேயாக அலைந்தான்
- என்ற தீராத பழியை நீ தேடிக் கொள்ள
- வேண்டாம்!
மேக :ஆண்டவா! இதென்ன சோதனை!
உதய :அன்பின் சாதனை சக்தி பெற்று விட்டால்,
- வாழ்வின் சோதனைக்கு அஞ்சாது மேகலா!
- ஒன்று நீ அன்றி மரணம்!
மேக :தற்கொலை கோழைகளின் சரணாகதி அறியா
- மல் செய்த முடிவுகளை மறந்து விடுங்கள்.
- மண்ணிலே தோன்றிய மலர்ச்செடி, மண்ணுக்கே
- உரமாவது போல், நம் உள்ளத்தின் எண்ணங்கள்
- எல்லாம் தோன்றிய இடத்திலேயே மறைந்து
- போகட்டும்! நமது இரண்டுயிர்களும் ஒன்றான
- இன்ப மயக்கத்தில் எதிர்காலம் ஒன்றிருப்பதையே
- மறந்து விட்டோம்! உண்மை அன்பு உறுதி
- யானால் உடலை விரும்பாது அரசே! உயிரைத்
- தான் நேசிக்கும் உள்ளத்தை உறுதி செய்து
- கொள்ளுங்கள். உடனே போய் விடுங்கள்.
- உலகம் சிரிக்குமுன் போய் விடுங்கள்.
உதய :ஒலமிடும் சாகரத்தின்முன் நின்று ஒட்டைச்
- சங்கை ஊதுகிறாய்! பசியால் தத்தளிக்கும்
- மனிதனுக்குப் பழைய தத்துவங்கள் பயன்படாது
- கண்ணே! பாய வந்த வேங்கையிடம் பொறு
- மையை எதிர்பார்க்காதே மேகலா நடுங்கும் என்
- உயிரை நாசமாக்கி விடாதே! கண்ணே வா
- போகலாம். நீயா இப்படி இருப்பது? ஐயோ!
- பார்க்கவே பரிதாபமாயிருக்கிறதே! புறப்படு