இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
சிரிப்பதிகாரம்
உதய :மரணத்தைக் கண்டே பயப்படாதவன் நான்!
- புறப்படுகிறாயா? இல்லையா?
மேக :அரச அதிகாரம் புத்த மடத்தில் செல்லாது
- இளவரசே! -
உதய :பார்க்கிறேன் அதையும் தடுப்பது யார் என்னை
- இங்கே? மேகலை மனத்தை மந்திரம் செய்து
- மாற்றிய அந்தச் சண்டாளர்களைப் பலியாக்கு
- வேன். நீ என் செல்வம் உரியவன் அழைக்கிறேன்
- எவனும் என்னைத் தடுக்க முடியாது!
மேக :நானே தடுத்தால்!
உதய :நீயே தடுத்தால் மேகலா! நீயா பேசுகிறாய்?
மேக :நிச்சயம்! சத்தியமாக நீங்கள் போகத்தான் வேண்டும். போய் ::விடுங்கள்!
உதய :ஆ போய் விடுங்கள்! வேண்டாம் கண்ணே உன்
- வாயால் மற்றொரு முறை அப்படிச் சொல்லாதே
- மேகலா! என் இதயம் இரண்டாக வெடித்து
- விடும்! உன் வாய் திறந்து போ என்றா
- சொல்லுகிறாய்?
மேக :ஆம் இளவரசே!
உதய :என்னையா?
மேக ;உங்களைத்தான்
உதய :போகிறேன் கண்ணே போகிறேன். உன்னை
- விட்டல்ல. இந்த உலகத்தைவிட்டே போய்
- விடுகிறேன்! கடைசியாக இந்த ஒரு வேண்டு
- கோளையாவது நீ நிறைவேற்றுகிறாயா?
மேக :என்ன?
- (தன் கட்டாரியை அவள் கையில் கொடுத்து)
உதய :இதோ பல பகைவர்களை நாசமாக்கிய இந்தக் கட்டாரி! எடுத்துக்கொள். என் மார்பைப்