இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
※——————————————————————————————————109
இடம்: வேறு ஒரு சோலை
|
உதய : கலைமணி! பெண்களை ஏன் படைத்தான்?
கலை : அது கடவுளைத்தான் கேக்கனும்:
உதய : கடவுளா படைத்தான்?
கலை : சேச்சே! கட்டாயம் அவரிந்த காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்!
உதய : பின் யார் செய்தது?
கலை : காதல் என்கிற பிசாசு செஞ்ச பொம்மைக்குத் தான் பொம்பளைன்னு பேரு!
உதய : பொய் சொல்லுகிறாய்!
கலை : போப்பா! ரொம்ப பெரியவங்களே சொல்றாங்க!
உதய : ஆனால், என் மேகலை அப்படியல்ல!
கலை : ஒவ்வொருத்தனும் அவனுக்குப் புடிச்ச பொண்ணைப் பத்தி இப்படித்தான் சொல்றது வழக்கம்.
உதய : பாசமுடன் பேசினாள்!
கலை : பாட்டி சொல்லிக் கொடுத்திருப்பா!
உதய : தென்றல் போல் ஆடினாள்.
கலை : தாயைப் போலப் பொண்ணு. அசைந்து ஆடினாள்!
கலை : கொடி ஆடுவது இயற்கை கோல மரம் ஆடக் கூடாது. ஆடினால் வேரோடு விழும்.