இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் ; 139
ஆம். ஆசை அளவுக்கு மீறினால் அதுவே ஹாஸ்யப் பொருள் ஆகிவிடுகிறது. ஒரு பெண் உடம்பின் அளவைவிட, அதிகமான நகைகளைப் போட்டால், அவளே பெரிய நகைச்சுவைப் பாத்திரமாகி விடுகிறாள். அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சாவதுபோல், மனித உள்ளம், கட்டுப்பாட்டை மீறினால் உலகம் சிரிக்கிறது. இந்த நாடகத்தில் நடமாடிய பாத்திரங்கள் மறைந்து பல நூறு வருடங்கள் ஆகிவிட்டன - ஆனால் அவர்கள் உண்டாக்கிய நகைச்சுவைக் காட்சிகள் மறையவில்லை.