இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
சிரிப்பதிகாரம்
பேபி : அடே கிழவா ஒல்ட்மேன்! என்னப்பாயிது! சுத்த
- முட்டாளாயிருக்கியே. கலையின் பெருமையைப்
- பற்றி கடுகளவாவது உனக்குத் தெரிந்திருந்தால்
- இப்படிக் கஷ்டம் கொடுத்திருப்பாயாடா
- காட்டேரி (சாமி சிரிக்கிறான்) சிரிக்காதே. இது
- கோபம்!
சாமி : என்ன பேபியிது! கானாவிலே ஆரம்பிச்சு
- கடைசி வரையிலும் கன்னாபின்னான்னு, கங்கு கரையில்லாமே,
- கவியா அளந்து கொட்டறே?
பேபி : மோனை தவறாது மொழியும் முத்தமிழ்ச் சிங்கம்!
- அழகின் எழிலன்! அகராதித் தமிழன்! ஆனந்த
- மோகன்! இந்த பேபியின் ஹாபி நாடகம்!
- அதைக் கெடுத்துவிட்டாய் நீ பாபி!
சாமி : என்னைப் போல அன்னக் காவடிக்கு உன்
- அடுக்குத் தொடர் விளங்காது பேபி, சும்மா
- எப்பவும் போல தமிழ்லேயே பேசு. ஆமாம்.
- இதெல்லாம் என்னப்பா ஒரே தாடி மயமாயிருக்குது.
பேபி : அடே ஒல்ட்மேன்! இந்தத் தாடியின் மகிமையைப்
- பற்றி உனக்கென்னடா தெரியும்?
சாமி : எனக்கும் கொஞ்சம் தெரியும் பேபி. இந்தத் தாடி
- இல்லாமலிருந்தா அந்த சாட்சாத் முருகப்
- பெருமான், அந்தக் குறவள்ளியைக் கல்யாணம்
- செஞ்சுட்டிருக்க முடியாது. இந்தப் பாழாப்
- போன தாடி இல்லாட்டி நம்ம நாட்டிலே மதச்
- சண்டையே இருந்திருக்காது. இது மாத்திரமா
- இந்தத் தாடி இல்லாட்டி பல போலிப்
- பண்டாரங்களெல்லாம் பெரிய மனுஷன் போல
- பேசமுடியுமா இந்த நாட்டிலே! எல்லாம் இந்தத்
- தாடியின் மகத்துவம் தானே பேபி.
(ராணி வருகிறாள்)