இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
21
- வேண்டுமா? கோவலனைப் போல் கொல்லப்பட
- வேண்டுமா? நான் தயார்!
சாமி : என்ன பேபி! ஆவேசம் வந்தவன் மாதிரி பேசறே?
- புலி வேஷம் மாதிரி ஆடறே!
பேபி : ஆம். அமரகாதலைப் பற்றி நினைத்தால்
- ஆவேசந்தான் வருகிறது! போடா! இந்த தெய்வீகக்
- காதலைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
- புரியாது. விளங்காது.
சாமி : சும்மா இருப்பா. இதெல்லாம் எனக்கு முப்பது
- வருஷத்திற்கு முந்திய்யே புரிஞ்சு போன விஷயம்.
- இந்த எழவெடுத்த காதல் இருக்குதே, காதல்...
- அது ஏழெட்டுக் குட்டிச் சாத்தான்களை
- உண்டாக்கி விட்டு, இப்போ ரிடயர் ஆயிடுச்சு.
- இப்போ அதுக்கு நான் பென்ஷன் குடுத்துக்கிட்டிருக்கேன்.
பேபி : சரி. அலவன்ஸும் சேர்த்துக் குடு போ. அது சரி
- - ஒல்ட்மேன்! நீ இப்போ எங்கே வந்தே, எதுக்கு
- வந்தே, ஏன் வந்தே?
சாமி : நானா? நீ எங்கே இருக்கே? என்ன செய்யறே?
- எப்படிப் படிக்கிறேன்னு பார்க்கலாம்னு
- வந்தேன்? அது கிடக்கட்டும் பேபி. உங்கப்பா -
- உங்கிட்டே ஒரு முக்யமான விஷயம் சொல்லிட்டு வரச் சொன்னாரு.
பேபி : அது என்ன முக்கியமான விஷயம்!
சாமி : உனக்குப் பெண் பார்க்கப் போகணுமாம்
- நாளைக்கு. ராத்திரியிலே எங்கேயும் போகாம
- நல்லாத் தூங்கச் சொன்னாரு.
பேபி : முட்டாள் - எனக்கு வேறே பெண் எதுக்கு?
சாமி : இப்படியே நாடகமாடிக்கிட்டு இருந்திடலாம்னு
- இருக்கியா?