இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
சிரிப்பதிகாரம்
பேபி : கலையே என் உயிர் கலைக்காகவே நான்
- வாழ்கிறேன். கலைவாணிதான் என் காதலி.
- மற்றப் பெண்களை மனத்தாலும் நான் பார்க்க
- மாட்டேன். எல்லாம் வல்ல ஈசன், என் அப்பன்
- தில்லை வாழ் நடராசன் கொடுத்த தலையை
- மறந்து கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனடா
- கசடனே! சரி சாமி நேரமாகுது. ராஜா
- கோவிச்சுக்குவான். நீ போ. ஒத்திகை முடியட்டும்
- காலையிலே வா. உபத்திரவப் படுத்தாதே! இந்தா
- இதை வைத்துக் கொள். போய்த் தொலை.
- (பணம் தருகிறான்)
சாமி : ஆ! பத்து ரூபாய் - பலே, இனிமே ஒரு நாளைக்கு
- நூறு தரம் நாடகம் நடத்தப்பா - அமர்க்களமா
- நடத்துங்க, காலா காலத்திலே கல்யாணம்
- நடந்திட்டா இந்தக் காதல் ஒத்திகை வேணாம்.
- உண்மை நாடகமே நடத்தலாம். குட் நைட் பேபி.
(கிளம்புகிறான்)
பேபி : ஒல்ட்மேன், யார்கிட்டேயும் சொல்லாதே
- ஒல்ட்மேன் நீ ஒரு கோல்ட்மேன்!
சாமி : ஆமாம். ஜாக்ரதை. உன் காதல் பீல்டிலே
- கலியாண வேலிபோட்டு பயிர் பண்ணு, குட்பை!
(போன பின்)
பேபி : ராணி
ராணி : போதும் தொடாதே!
பேபி : என்ன ராணி உண்மையிலேயே நடிக்கிறே?
ராணி : யார் பெண்? நாளைக்குப் பார்க்கப் போகிறாயாமே!
பேபி : ராணி! அப்பாவின் காசாசைக்காக, நான் இந்தக்
- கல்யாண விலங்கில் மாட்டிக் கொள்ள
- மாட்டேன். கொஞ்சம் நாள் பொறு. வீட்டில்