இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
23
- மெதுவாகத் திருடித் திருடி 2 லட்சம் ரூபாய்
- சேர்த்து விடுகிறேன். பிறகு நாம் இருவரும்
- காஷ்மீர், சைனா, ஜப்பான் எங்காவது பறந்து
- விடலாம். மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டு
- பிடித்ததே நமக்காகத்தான் ராணி,
ராணி : (அழுது கொண்டு) கேவலம் ஏழைப் பாடகி
- தானே என்று எண்ணி என்னைக் கைவிட்டுவிட மாட்டாயே பேபி!
பேபி : ஆகா! இந்த உலகம் புரண்டாலும் சரி, இந்து
- மகா சமுத்திரம் காய்ந்தாலும் சரி, இமயமலை
- வெடித்தாலும் சரி, இன்றைய இந்தியா இருபதானாலும்
- சரி, இந்த பேபி இந்த ராணியை கைவிடமாட்டான்
- கண்னே! நம்பு என்னை! இது தேர்தல் வாக்குறுதியல்ல!
- தெளிவான காதலின் தெய்விகக் குரல்!
ராணி : உன் அப்பா பார்க்கணும்னு சொன்ன பெண் யார்?
பேபி : அந்த வாணிதான் ராணி!
ராணி : யார் வாணியா! எனக்கு ரொம்பத் தெரியுமே!
பேபி : ஐயோ! பெண்ண அவள். அவளைப் பார்த்தாலே
- எனக்கு பயமாயிருக்கிறது. அவளையாவது நான்
- கல்யாணம் செய்து கொள்வதாவது! ராணி
- நீ வருந்தாதே, நான் பி.ஏ. பாஸ் பண்ணினால்
- தானே வாணியை அவள் தாத்தா எனக்குக்
- கொடுக்கச் சம்மதிப்பார். நான் பாஸ் பண்ணப்
- போவதுமில்லை. வாணி என்னைக் கலியாணம்
- செய்துகொள்ளப் போவதுமில்லை.
ராணி : இந்த வருஷம் பரீட்சை எழுதியிருக்கிறாயே!
பேபி : உம், என்னமோ எழுதியிருக்கேன். அப்பா திட்டுவாரேன்னு
- பரீட்சைக்குப் போனேன். எல்லாப் பேப்பர்லேயும்
- நிச்சயம் சைபர் மார்க்தான்.