இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்
25
மகேஸ்வர பூ: வாங்க, வாங்க பூபதி! வாப்பா பேபி
- வா. உட்காருங்க பூபதி. உட்காரப்பா பேபி
- உட்காரு.
பூபதி : நம்ம பேபி ரொம்ப கூச்சப்பட்டவன். வரவே
- மாட்டேன்னு பிடிவாதம் புடிச்சும் நான்
- கொண்டு வந்துட்டேன். பெரியவர்களைக்
- கண்டால், ரொம்ப பயபக்தியோட நடந்து
- கொள்வான். உட்கார்ரா பேபி. நம்ம தாத்தா -
- ‘சும்மா உட்கார்’
பேபி : Yes, தாத்தா, I am shy fellow - பயம் பக்தி -
- அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம்
- உள்ளவன். அது பெண்களுக்கு மட்டுந்தான்
- சொந்தமா? ஆண்களுக்கும் வேண்டும் என்பதில்
- அசையாத நம்பிக்கையுள்ளவன். நான் நல்லவன்.
- நாடறிந்தவன். நற்கலைஞன் - நாளைய கவிஞன்!
ம.பூ : சரி! உட்காரப்பா. அம்மா வாணி...
(பேபி பயந்து உட்காருகிறாள்)
ம.பூ : வாணி! வாம்மா.
வாணி : ஏன் தாத்தா.
ம.பூ : பார், மாமா வந்திருக்கார். பேபி வந்திருக்கு.
வாணி : ஓ! மாமாவா! வணக்கம் மாமா! யாரது - பேபி
- கூட வந்திருக்கா - என்னப்பா பபூன் பேபி