தவத்திரு ஞானியாரடிகள்
99
ஞானியார் அடிகள்
(1873 – 1942)
கண்ணிரண்டும் கல்விக்கண் ஒன்றும் பெற்றுக்
காலமெல்லாம் தமிழுக்கும் சைவத் திற்கும் தொண்டுசெய்தோர் பலராவர்; அவருள் காமச்
சுவைவிலக்கிச் செய்றகை சுகம் விலக்கி வாழ்ந்த பண்டையநாள் சமணரைப் போல் செந்த மிழ்க்கும்
பரஞ் சோதி முனிவரைப்போல் சைவத் திற்கும் எண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து கிர்த்தி ஏந்தியவர் குானியார் அடிக ளாவார்!
ஒரைந்து மொழியறிந்த புலியூர் ஞானி
ஒய்வின்றிப் பெருஞ்சைவம் பேசி வந்தார். ஈரஞ்செய் கின்றதமிழ் மொழிநுட் பத்தை
எழுத்தெழுத்தாய்ச் சொல்சொல்லாய் விளக்கி வந்தார்; வீரஞ்செய் புறப்பொருளின் விளக்கம் ஆதி
வேதாந்தம் சித்தாந்தம் இவற்றை யெல்லாம் காரஞ் செய் யாதகுரல் இனிமை யாலும்
கனிந்தெழுந்த பேச்சாலும் பாய்ச்சி வந்தார்!
கைச்சங்கம் எடுத்தரதும் கூட்டத் தார்க்கும்
கால்நடைகள் மேய்ப்பார்க்கும் மற்ற வர்க்கும் மெய்ச்சங்கம் எதற்காக? எங்கட் கன்றோ
வித்தை வரும்? என்று சிலர் பேசக் கேட்டுத் தச்சன்கை உளிபதித்த விரல் போ லானார்.
தமிழ்ச்சங்கம் தோன்றுதற்குத் துணையாய் நின்றார்! பொய்ச்சிந்தை மனுநீதி மயக்கம் தீர்த்துப் பொய்யாத குறள்நீதி கூறி வந்தார்.