சிறந்த சொற்பொழிவுகள்
4. வடலூர் சமரச சன்மார்க்க மகாநாடு
கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இம் மகாசபைக்குத் தலைமை வகித்தபோது கூறிய முன்னுரை. 28.1.1926
அருள்பழுத்த செழுங்கனியே அகம்பழுத்த சிவஞான
அமுதே முத்திப் பொருள்பழுத்த அருட்பாவை எமக்களித்த தெய்வமணப்
பூவே என்றும் மருள்பழுத்த அடியேங்கள் மனவிருளை அகற்றவரு
மணியே மெய்ம்மைத் தெருள்பழுத்த வடலூர்வாழ் இராமலிங்க நின்னருளைச்
சிந்திப் பேனே! * > . .
தேன்கலந்த திருவமுதாம் தேவாரத் திருப்பாட்டைத்
தினமு நாடி
நான்கலந்து பாடுங்கால் நானறியேன் எனை’ எனநீ
நவின்ற பாட்டை
வான்கலந்த வடலூர் வாழ் இராமலிங்க மணியேயான்
வழுத்துங் காலை
ஊன்கலந்த உயிரெல்லாம் உளமெல்லாம் உணர்வெல்லாம்
உருகு மாலோ.
வள்ளால்நின் வாசகத்தை வடித்ததமிழ்த் தேனென்கோ
வானோர் எய்தா
அள்ளாத அமுதென்கோ அருளென்கோ அன்பென்கோ
அறமே என்கோ -
பொள்ளாத மணியென்கோ பொருளென்கோ பொன்னென்கோ
புலன்கள் நாடி . . "
விள்ளாத வீடென்கோ இராமலிங்க மாமணியே
விரிக்கொ னாதே.