பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

33


சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்கள். இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கிறான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லி அம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய்போலாயிற்று” என்று கூறினார். பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதே சமயத்திலே, சீதாபதி மதுரவல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்று, சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம், அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன்!! – என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்தி விட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!

“என் மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகிவிட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்கும் மட்டும்,

5