சொல்லாதது
53
அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?
சுந்தரி:- “தங்கம்! உங்க அப்பா ரொம்ப நல்லவரென்று எண்ணாதே! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லிடட்டுமா?”
கனகன்:- “சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி உனக்குக் கோடிப் புண்யம், அதை மட்டும் சொல்லாதே!”
தங்கம்:- “அம்மா, அம்மா, சொல்லம்மா! சொல்! அப்பா, அம்மா வாயை மூடாதே! அம்மா, சொல்லு!”
சுந்தரி:- “உங்க அப்பா என்ன செய்தாரு தெரியுமா! ஒருநாள்…....”
கனகு:- “ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடியவில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா.”
கட்டித் தழுவிக் கொண்டு)
“சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவு செய்து, சொல்லாதே கண்ணு.”
சுந்தரி:- “இப்படித் தளுக்கு செய்து விட்டுத் தானே என்னைத் தவிக்க வைத்து விட்டுப் போயிட்டிங்க முன்னே.”
கனகன்:- “அதற்காகத் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகிவிட்டதே!