பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடுமூஞ்சி!


னியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!” –

கணக்கப்பிள்ளை.

“சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது”

மாலை விற்பவன்.

“ஒருநாள் கூடத் தவறமாட்டார், பெரிய பக்திமானல்லவோ அவர். மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்து விடுவார்”

குருக்கள்.

“நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது”

வேதம்.

“மணி ஆறா? சரிதான், இப்பதான் பைத்தியம், கோயிலுக்குக் கிளம்பி இருக்கும்”

இராமி.

சனியன், உருத்திராட்சப் பூனை, பக்திமான், கிழக்குரங்கு,

பைத்தியம்! இந்தப் “பஞ்சாட்சர” அர்ச்சனை, ஒரே நேரத்தில் ஒரே ஆசாமிக்கு, ஐந்து வேறு வேறு ஆசாமிகள் மூலம் நடந்தது. இன்னமும் எங்கெங்கு அவரைப்பற்றி என்னென்ன விதமான அர்ச்சனை நடந்தது என்று விசாரித்தால் சஹஸ்ர நாமத்துக்குப் போகும். அவர் பெயர் ஆறுமுக முதலியார்.