பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 13 " எப்படியோ இருக்கேன், சார் ! எனக்கென்ன பயம் ? விச்சு துணைக்கிருக்கான். பனமா ? காசா ? பயப்பட றதுக்கு?’’

  • ஆமாம் ! ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசலெல்லாம் எருக்கஞ் செடியா முளேக்க விட்டிருக்கியே?’

“ அதுக்கு நேரம் ஏது சார் ? எனக்குத்தான் கோழி கூப்பிடறதுக்கு முன்னே யிருந்து இருட்டறவரை வாடிக்கைக்காரங்க வீட்டு வேலை சரியா இருக்கே ! இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே?” என்று சரியாகக் காரணம் சொன்னுள் பட்டு. பேராசிரியர் சிற்சபேசன் அந்தக் கிராமத்தில் குடியேறி ஒரு வருடம் ஓடிவிட்டது. பட்டுவின் தம்பி இப்போது நாலாங் கிளாஸ் படிக்கிருன். வீடு பெருக்குகிற வேலைக்காரப் பெண்ணுக இருந்தாலும் அவள் மேல் ஒரு தனி அனுதாபம் அவருக்கு உண்டு. ஒரு நாள் காலே பட்டு வாசல் தெளித்துக் கோலம் போட வரவில்லை. விடிந்து வெகு நேரமாகி விட்டது. -

  • இந்தப் பெண் பட்டு வரலியா இன்றைக்கு ?’ என்று தம் மனைவியிடம் கேட்டார் சிற்சபேசன்.

" அந்தப் பெண் இனிமேல் வராது !” " ஏன் அப்படி ?” பதில் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தாள் அவர் மனைவி. ஏன் சிரிக்கிறே?” "ஒண்னுமில்லே' என்று சொல்லிக் கொண்டே கணவன் பக்கத்தில் நெருங்கி வந்து தணிந்த குரலில், * பட்டு பெரிசாயிருக்கா !” என்ருள் அவள். சிற்சபேசனுக்குத் திகைப்பு ஒருபுறம் மகிழ்ச்சி ஒரு புறம். இரண்டையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், " அந்தப் பெண்ணுக்கு இந்த ஊரில் ஏனென்று கேட்கக்