பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : வாங்கித்தறதுன்கு தரட்டும். கம்பி எண்ணவச்சான்ன வைக்கட்டும்.’’ அர்ச்சகர் அமைதியாகப் பேசினர். எழுபத்திமூன்று நாப்பத்தியேழு அர்ச்சகர் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். அவர் முகத்தில் பயத்தின் சாயலே இல்லே. அவர் இப்பொழுது வேகமாக நடந்தார். கைகளே ஆட்டிக்கொண்டு நடந்தார். " அப்பம் ஒரு காரியம் செய்வமா?’ என்று கேட்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.

    • 6T orgyf 22% -

" நீரும் அப்படியொண்னும் டாட்டாவுமில்லெ, பிர்லாவுமில்லெ. ஏதோ ஒரு மாதிரியா காலத்தெ தள்ளிட் டிருக்கிரு. உமக்காகச்சுட்டி ஒண்ணுவேணுச் செய்யலாம்.” ' விஷயத்தைத் தெளிவாகச் சொல்லலாமே. ஏன் சுத்திச் சுத்தி வளைக்கணும் ?’ என்று கேட்டார் அர்ச்சகர். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழுக்கு பிடரியெத் தாக்கிற்று.

  • எச். ஸிட்டெ ஒம்ம நெலமெயெ எடுத்துச் சொல்லி சுளுவா முடிக்கப் பாக்கறேன். அஞ்சு ரூபா எடும் சட்னு: எடும். எனக்கு வேறெ வேலை இருக்கு.’’

அர்ச்சகரை முன்பின் யோசிக்க விடாமல் பணத்தை வாங்கிவிட எண்ணினுன் அவன். அர்ச்சகர் முன்னேவிடவும் அமைதியாகச் சொன்னர் : இதென்ன பேச்சு இது. அஞ்சு ரூபாய் தரலாம்னு பத்தாத் தந்துடப் படாதா? அம்புட்டுக்கெல்லாம் இருந்தா நான் ஏன் நதிக் கிஷ்ணனெ குளுப்பாட்டப் போறேன். மேலும் இப்போ நான் என்ன திருடினேன, கொள்ளே யடிச்சேனு, இல்லெ ரோட்டிலெ போறவ கையெப் புடிச்சு இழுத்தேன, என்ன தப்புப் பண்ணிப்பிட்டேன்னு சொல் லட்டுமே, உம்ம எச். ஸி. தலெயெ சீவறதுன்ன; சீவட்டுமே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/67&oldid=830447" இலிருந்து மீள்விக்கப்பட்டது