பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

சுண்டெலிகளுக்குக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, களஞ்சியத்தின் துவாரத்தை பெரிதாக்கிவிட்டது. உடனே மற்ற சுண்டெலிகளை தன் வளைக்கு, விருந்துக்கு வருமாறு அழைத்தது. மேலும் ஒவ்வொன்றுக்குத் தேவையான அளவு தானிய உணவு கிடைக்கும் என, பெருமையாகக் கூறியது அந்தச் சுண்டெலி.

மற்ற சுண்டெலிகள் எல்லாம் விருந்து உண்ண ஆவலாக வந்தன. அவற்றை தன் வளைக்கு அருகில் இருந்த களஞ்சியத்தின் துவாரத்துக்கு அழைத்துச் சென்றது சுண்டெலி. ஆனால், அந்தக் களஞ்சியத்தில் துவாரமே காணப்படவில்லை. ஏமாற்றம் அளித்தது சுண்டெலிகளுக்கு, களஞ்சியத்தின் துவாரம் சிறிதாக இருந்த போது, அதைக் கவனிக்காமலிருந்த களஞ்சியத்தின் சொந்தக்காரன், அது பெரிதானவுடன், அதைக் நன்றாக மூடிவிட்டான் கண்டெலிகள் ஏமாற்றத்துடன் ஓடின.

7

ஏழைகளின் நெஞ்சக் குமுறல்


ஒரு ஊரில், ஒரு விறகு வியாபாரி இருந்தான், ஏழை, எளியவர்கள் காட்டில் கஷ்டப்பட்டு, விறகுகளை வெட்டிக் கொண்டு தலையில் சமத்து வருவார்கள், அவர்களிடம் மிகவும் தறைவான விலைக்கு வாங்குவான். அதிகமான விலைக்கு பிற்பது விறகுக் கடைகாரனின் வழக்கம். இப்படியாக, அவன் பணக்காரனாகி விட்டான். வீடு கட்டி வசதியாக வாழ்ந்தான்.

அந்த ஊரில் அவனைத் தவிர வேறு வியாபாரி இல்லை, அதனால், அவன் கேட்கும் விலைக்கு விற்பார்கள், சொன்ன