பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23 பொருட்படுத்துவதே இல்லை. ஒரு நாள் அவரிடம் நேரில் சென்று வாயில் வந்தபடி ஏசினான். அவர், “உன்னுடைய வசவுகளை எல்லாம் கூறி முடித்து விட்டாயா?” என்று கேட்டார். அவன் பதில் எதுவும் சொல்லாமல் நின்றான். “உன்னுடைய உறவினர்களின் வீடுகளுக்குப் போகும் போது, ஏதாவது கொண்டு செல்வாயா?” என்று கேட்டார். "ஆம், வாழைப்பழம், வேர்க்கடலை ஏதாகிலும் வாங்கிச் செல்வேன்” என்றான் அவன். "நீ கொண்டு போனதை அவர்கள் பெற்றுக் கொள்ள வில்லையானால், என்ன செய்வாய்?” என்று கேட்டார் பெரியவர். "திரும்ப எடுத்துக் கொண்டு, வீட்டுக்குத் திரும்பி விடுவேன்” என்றான். "தம்பி அதுபோல, சற்று முன், என்னை ஏசினாய் அல்லவா? அந்த ஏச்சுக்களை இப்போது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், நீ என்னை ஏசியவைகளை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், நீ ஏசிய ஏச்சுக்களையும் திரும்ப நீயே எடுத்துச் செல்” என்றார் பெரியவர். பிறகு, அவன் ஏசுவதை நிறுத்தி விட்டான். 12 அவர் எதற்காக இருந்தார்? ஒரு ஊரில் கோயில் திருவிழா வழக்கம்போல் ஒரு பாகவதரை வரவழைத்து கதை நிகழ்ச்சி நடத்தினார்கள் கோயில் நிர்வாகிகள். கூட்டம் கூடியது. இன்று “வள்ளி திருமணம்” கதையை பிரபல பாகவதர் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.