32
பட்டிருந்த சட்டி ஒன்றைக் காட்டி, இது ஒரு ‘அமுதசுரபி’என்றனர்.
‘அமுத சுரபி’என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது என்று கூறி, திரு திரு என்று விழித்தான் விறகு வெட்டி வீரன்.
“நமக்கு என்ன உணவு வேண்டுமோ, அதை நினைத்து, சட்டியில் கையை விட்டால், சட்டியில் என்ன உணவு வேண்டுமானாலும் நிறையக் கிடைக்கும்” என்றனர் கந்தர்வர்கள்.
வீரன் அவர்கள் கூறியதைக் கேட்டு அதிசயப்பட்டான். ‘அறுசுவை உணவு வேண்டும்’ என்று நினைத்து சட்டியில் கையை விட்டான்.
சுவையான அறுசுவை உணவு கிடைத்தது. மகிழ்வோடு மூவரும் உண்டனர்.
இப்படியாக வீரன் உழைக்காமல் உண்டு சுகமாக இருந்து வந்தான்.
பல மாதங்கள் சென்றன. கந்தர்வர்கள் புறப்படத் தயாரானார்கள்.
அப்பொழுது வீரனிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர். அவன் அமுதசுரபி பாத்திரத்தை தருமாறு கேட்டான்.
“அதை உன்னால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலாது; வேறு ஏதாவது தருகிறோம்” என்றனர்.
வீரன் பிடிவாதமாக, அதையே விரும்பிக் கேட்டான் அவர்களும் அவன் விருப்பப்படி அமுதசுரபி பாத்திரத்தை அவனுக்குக் கொடுத்து விட்டுச் சென்றனர்.
வீட்டுக்குத் திரும்பியவீரன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தான். முன்போல் அவன் விறகு வெட்ட காட்டுக்குப் போகவில்லை.