பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


“சூதாட்டத்தில் ஈடுபட்டேன். பணத்தை இழக்க நேரிட்டது. இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்று மீண்டும் விளையாடினேன். எல்லாவற்றையும் இழந்து, இப்போது கடனாளி ஆகி, துன்புறுகிறேன்.” என்று உண்மையைக் கூறினார்.

“சரி, இப்பொழுது நான் கடன் கொடுத்தால், அதை எப்படி எனக்குத் திருப்பித் தருவாய்!” என்று கேட்டார்.

“மாதா மாதம் சிறு தொகையாகத் தந்து விடுகிறேன்” என்றான் அவன்.

“இப்போது என்னிடம் கடன் வாங்கி, அவருடைய கடனை தீர்த்து விடுவாய், பிறகு எனக்கும் உனக்கும் தகராறு உண்டாகும். பழைய கடனைத் தீர்ப்பதற்காக புதுக் கடன் வாங்குவது முட்டாள்தனமாகும். இப்பொழுதும் ஒன்றும் தொல்லை இல்லை.

பழைய கடன்காரனிடம் சென்று, மாதந்தோறும் சிறு தொகை தருவதாகப் பணிவோடு சொல்லு, அவனும் சம்மதிப்பான். புதிதாக கடன் வாங்குவதற்காக முயற்சிக்காதே. மாதம்தோறும் கொடுத்து விடு; கடனும் தீர்ந்துவிடும். நிம்மதியாக இருக்கலாம்” என்று அறிவுறுத்தினார்.

அவனும் அவர் கூறியபடியே செய்து கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு அமைதியாக வாழ்ந்தான்.

20
தண்ணீர் கரையிலேயே உள்ளது


பண்ணையார் ஒருவர் தம்முடைய நிலங்களைப் பார்வையிடச் சென்றார். பண்ணை ஆட்களும் கணக்கரும் உடன் சென்றனர்.

அப்போது, அருகில் இருந்த ஏரியைப் பார்த்து, “இந்த ஏரிநீர் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் பண்ணையார்.