பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 அதைக் கொண்டு போய் வியாபாரியிடம் கொடுத்தான். ஆனால், அந்த வியாபாரிக்கு 500 ரூபாய் பரிசு கொடுக்க மனம் வரவில்லை.

“என் கையில் பணத்துடன் ஒரு வைர மோதிரம் இருந்தது. அதைக் கொண்டு வந்து கொடுத்தால், நான் அறிவித்தபடி 500 ரூபாய் தருகிறேன்” என்று பொய் சொன்னான். வியாபாரி.

தொழிலாளி, நீதிமன்றத்தில் முறையிட்டான்.

வியாபாரியைப் பார்த்து நீதிபதி, 'உன்னுடைய பையில் 2000 ரூபாய் இருந்ததாகவே அறிவித்தாய். வைர மோதிரமும் இருந்ததாக இப்போது கூறுகிறாய். ஆகையால், தொழிலாளி கண்டு எடுத்த பையில் வைர மோதிரம் இல்லை. எனவே, இந்தப் பை உன்னுடைய பையாக இருக்க முடியாது. அதனால், இந்தப் பை, யாருடையது என்று தெரியும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கட்டும். மறுபடியும், நீ விளம்பரம் செய், வைர மோதிரத்துடன் கூடிய உன் பை ஒருவேளை அகப்படலாம்!” என்று தீர்ப்புக் கூறினார்.

வியாபாரி தான் கூறிய பொய்யை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு, தொழிலாளியிடம் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தன் பையைப் பெற்றுக் கொண்டான்.

31

சிறுவனின் புத்திசாலித்தனம்

ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்த வில்லை. அதனால் மாவட்ட ஆட்சியாளர் ஆணையின்படி, புரோகிதரை சிறையில் அடைத்தனர். புரோகிதரின் தந்தை இறந்து ஒருவருடம் ஆயிற்று. அந்த