பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 33 கிராமவாசியின் பெருந்தன்மை கிராமத்திலே படித்து, பட்டனத்தில் வேலையில் இருந்தான் ஒருவன். அவன் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்னே இறந்து விட்டனர். அவனுக்கு வீடும் கிடையாது. உறவு என்று செல்ல ஒருவன் மட்டுமே இருந்தான். இருவரும் ஒத்த வயதினர். மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின் கிராமத்துக்கு வந்து உறவினன் வீட்டில் தங்கினான். அவர்கள் இருவரும் இளம் வயது முதல் சமீப காலம் வரை பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, “கிராம வாசிகள் எளிதில் ஏமாந்து விடுவார்கள்” என்றான் பட்டனவாசி. 'ஏமாறுவார்கள் என்று சொல்ல இயலாது, கள்ளம், கபடம் * o s * & - * 勢3 * g இல்லாத பெருந்தன்மை வாய்ந்தவர்கள்' என்றான் கிராமவாசி. ஊரைச் சுற்றிப் பார்த்து வருவதாக புறப்பட்டான் பட்டனவாசி. வாரச்சந்தை நடக்கும் இடத்தில், நின்று, கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான் பட்டனவாசி. ஒவ்வொருவராக அவனைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது. "ஏதாவது தொலைந்து விட்டதா?’ என்று அவர்கள் கேட்டனர். "ஆம், அரை பவுன் மோதிரம் விரலிலிருந்து விழுந்து விட்டது” என்றான் பட்டனவாசி. அருகில் நின்றவர்கள் பலர் சுற்று முற்றும் தேடலானார்கள்.