பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நிறைவேற்ற நான் குபேரன் அல்ல! உனக்கு ஆற்றல் இருந்தால், நீயே அதைச் செய்யலாமே?” என்று கண்டிப்பாகக் கூறினான். தந்தையின் பிடிவாதத்தைக் கேட்டு வருந்திய இளவரசன், ‘விரும்பியதை எல்லாம் அளிக்கக் கூடிய கற்பகத்தருவாக இருக்கவேண்டும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டு உயிரைவிடவேண்டும்” என்ற உறுதியோடு, மலைப்பகுதிக்குச் சென்று, கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய தியாக உள்ளத்தையும், உறுதியையும் அறிந்த இந்திரன் கருணை காட்டி, அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றினான். மக்களை வாட்டிய பஞ்சம் நீங்கியது. நாட்டில் மழை பொழிந்தது, மக்கள் செழிப்புடன் வாழலானார்கள். இப்படி இருக்கும்போது, இளவரசன் இந்திரபிரயன் முன், இந்திரன் தோன்றி, "இந்த நாட்டில் உன்னிடமிருந்து உதவி கேட்டுப் பெற எவருமே இல்லை. ஆகையால், நீ சுவர்க்க லோகத்துக்கு வந்து வாழ்வாயாக’ என்று அழைத்தான். இந்திரனின் அழைப்பை ஏற்காமல், "என் நலனை மட்டும் பெரிதாகக் கருதி, நான் மட்டும் எப்படி வருவேன்? என் குடிமக்களுடன் வாழ்வதே எனக்கு கவர்க்கலோகம்” என்று மறுத்து விட்டான். இளவரசன். அவனுடைய பரந்த நோக்கத்தையும், தியாக உள்ளத்தையும் பாராட்டி, "உன் நாட்டு மக்கள் அனைவரும் கவர்க்க பூமிக்கு வந்து சேரலாம்” அவர்களை உன் விருப்பம் போல் அழைத்துச் செல்லலாம். என்று பெருந்தன்மையோடு கூறினான் இந்திரன். “ ஆனால், எதிர்காலத் தலைமுறையினருக்கு உதவ நான் இங்கு இருக்க வேண்டும்” என்றான். இளவரசன்.