பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தங்கள் அரசனும் ராணியும் இறந்து விட்டதால், இனி போ புரிய அவசியம் இல்லை. உச்சயிணி நாட்டின் ஆட்சியை தாங்களே ஏற்று நடத்தலாம் என்ற கேட்டுக் கொள்வதாக, பகை அரசனான பராக்கிரமனக்கு சமாதானத் தூது அனுப்பினார்கள் அமைச்சர்கள் போர் புரியாமலேயே வெற்றி கிடைத்து விட்டதாக பெருமகிழ்ச்சியில், உச்சயினி அமைச்சர்கள் அனுப்பிய சமாதானச் செய்தியை ஒப்புக் கொண்டு, உச்சயினிக்குள் கம்பீரமாக நுழைந்தான் பராக்கிரமன். பராக்கிரமனின் படைமுகாமில் இருந்த வீரர்கள் தங்கள் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டு விட்டு, அலட்சியமாக இருந்தனர். மேலும், போர்முனையில் போதுமான எச்சரிக்கையோடு இல்லாமல், இருந்தனர். உச்சயினி நகரத்துக்குள் சிக்கிக் கொண்ட பகை அரசன் பராக்கிரமன் சிறைபிடிக்கப்பட்டான். இதைப் பெரிய வாய்ப்பாகச் கொண்டு உச்சயினியின் படைகள் வீறு கொண்டு எழுந்து பகைவர்களின் பாசறைக்குள் புகுந்து, பெருத்த சேதத்தை உண்டாக்கின. அதன்பின், மறைந்திருந்த அரசனையும் ராணியையும் வெளியே அழைத்து வந்து, ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்கள் அமைசசாகள. அமைச்சர்களின் சாமர்த்தியத்தால், தன் நாடு, பகைவனிடம் சிக்காததோடு அவனையும் சிறைப் பிடித்ததற்கு அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்து, பல வெகுமதிகளை அளித்தான் உச்சயினி அரசன. திறமையான அமைச்சர்களால், நாடும் அரசனும் மாற்றானிடம் அகப்படாமல் தப்பிக்க முடிந்தது