பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்பு கொண்டாடிடு கண்ணே-உயிர்கள்
அத்தனையின் மேலும் மெத்தமெத்த நீயே
அன்பு கொண்டாடிடு கண்ணே,

பெற்று வளர்த்தவர் அப்பா அம்மா-கூடப்
பிறந்து வளர்ந்தவர் அண்ணன் தம்பி
கற்றுக் கொடுத்தவர் பள்ளி ஆசான்-நம்மைக்
கண்டு மகிழ்ந்திடும் நண்பர் மீதே
அன்பு கொண்டாடிடு கண்ணே.

துள்ளிப் பறந்து திரியும் சிட்டு - சிறிது
சோற்றைக் கண்டு வரும்அக் காக்கை
அள்ளிப் போட்ட உணவுக் காக - வாலை
ஆட்டி நன்றி காட்டும் நாய் மேல்
அன்பு கொண்டாடிடு கண்ணே!

1