பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எல்லோரும் உன்னை
நல்லவன் என்றே
ஏற்றிப் புகழ்ந்திட வேண்டும்
அதைக் கேட்டே என்
எண்ணங் குளிர்ந்திட வேண்டும்

கற்றவர் போற்றிடும்
கல்வியில் சிறந்துநீ
கண்ணாய்த் திகழ்ந்திட வேண்டும்
அதைக்கேட்டே என்
எண்ணங் குளிர்ந்திட வேண்டும்.

என்றன் ஆசையை
ஏற்று நிறை வேற்ற
என்றும் முயன்றிட வேண்டும்
அதைக் கேட்டே என்
எண்ணங் குளிர்ந்திட வேண்டும்.

2