பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உண்மை பேசும் உத்தமனை
உலகம் முற்றும் புகழ்ந்தேத்தும்
உண்மை பேசும் உத்தமனை
ஊரும் நம்பிக் கொண்டாடும்

மனதிற் பட்ட கருத்தினையே
மறையா துரைப்போன் உயர்ந்தவனாம்
மனிதர் கூட்டம் அவன்சொல்லை
மதித்துப் போற்றி நடந்திடுமாம்

இருட்டில் வழியைக் காட்டிடவே
எரியும் விளக்கை நம்பிடுவார்
உருட்டுப் புரட்டாம் உலகத்தில்
உண்மை யாளனை நம்பிடுவார்.

உலகில் உள்ள மக்களெல்லாம்
உண்மை பேசி வாழ்ந்தாலே
அலகில் இன்பம் உண்டாகும்
அன்பும் பண்பும் நின்றோங்கும்.

5