பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எண்ணிய எண்ணம் நிறைவேற
எவர்க்கும் ஊக்கம் வேண்டுமடா!
நண்ணிய பொருளும் நிலைத்திருக்க
நாளும் ஊக்கம் வேண்டுமடா!

ஊக்கம் கொண்டவன் முயற்சிசெய்யும்
ஒவ்வொரு செயலும் வெற்றியடா!
காக்கும் கடவுள் தடுத்தாலும்
கடமை வீரன் வென்றிடுவான்!

உயர்ந்த மலையும் கடுகாகும்
ஊக்க முள்ளவன் முன்னாலே
அயர்ந்து நிற்பவன் உள்ளத்தில்
அணுவும் பெரிதாய்த் தோன்றுமடா

6