பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எண்ணம் உயர்வாய் எண்ணுவாய்
எதையும் இனிதே எண்ணுவாய்
விண்ணை யெட்டிப் பிடிக்கவே
வேண்டும் என்றே எண்ணுவாய்

சின்னஞ் சிறிய செயல்பல
செய்யும் நினைப்பை விட்டுநீ
ஒன்று பெரிதாய் எண்ணினால்
உண்டாம் பெரிய நன்மையே

தனது நலமே எண்ணாதே
தழைக்கும் உலகிற் கதுதீமை!
மனிதர் எல்லாம் வாழவே
மனங்கொள் நீயும் வாழுவாய்!