பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஏறி ஏறிச் சென்றால் - எதையும்
எட்டிப் பிடிக்க லாகும்
ஏறா மலே நின்றால் - கீழே
ஏங்கி நிற்க நேரும்

பாடம் நன்றாய்ப் படித்தால் - நீ
பட்டம் பலவும் பெறுவாய்
சோடை யாக இருந்தால் - நீ
துன்பப் பட்டுத் திரிவாய்

கட்டுப் பெட்டி போல - ஒரு
கல்லுப் பிள்ளை யார்போல்
விட்ட இடத்தி லேயே - குந்தி
விழித்துக் கொண்டிராதே!

ஆற்றல் உள்ள வரைக்கும் - வெற்றி
அடையும் எல்லை வரைக்கும்
ஏறி ஏறிச் சென்றால் - எதையும்
எட்டிப் பிடிக்க லாகும்.

8