பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒளவைப் பாட்டி நமது பாட்டி
அழகு தமிழில் கவிதை சொல்லும்
அருமைப் பாட்டி பெருமூ தாட்டி
ஒளவைப் பாட்டி நமது பாட்டி

சின்னச் சின்னப் பிள்ளை யெல்லாம்
சேர்ந்து பாடத் தக்க வாறு
சின்னச் சின்ன வாக்கியத்தில்
செல்ல மாகப் பாடி வைத்தாள்

கையில் ஒற்றைக் கம்பை ஏந்திக்
கால்தள்ளாட ஊன்றிச் செல்வாள்
பையன் யாரும் வந்துவிட்டால்
பாட்டுப் பாடி வாழ்த்திச் செல்வாள்.

பாட்டுப் பாடு பாட்டி என்றால்
ஊற்று கூழை என்று சொல்வாள்
வாட்டந் தீரக் கூழ் குடித்து
வகைவகையாய்ப் பாட்டுச் சொல்வாள்!

12