பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கப்பல் இது கப்பல்
கடல்கடந்து போகுமொரு கப்பல்
கரைவிட்டுக் கரைபோகும் கப்பல்

அடக்கிவைத்த யானையினைப் போலே
அலைகடலின் துறைமுகத்தின் ஒரம்
வடக்கயிறும் சங்கிலியும் கொண்டு
வகையாகக் கட்டிவைத்தார் பாரே!

விசைப்பொறியால் சரக்குகளை ஏற்றி
வேற்றுாரில் இறக்கிவிடும் கப்பல்
அசைந்தசைந்து கடல்மீது மிதந்தே
ஆட்களையும் ஏற்றிக்கொண்டு போகும்!

அலைகடலில் செல்லுகின்ற போதே
ஆடுகின்ற ஊஞ்சலைப்போல் இருக்கும்
தலைமயக்கம் வந்தாலும் கூட
கடற்பயணம் உடல்நலத்தைக் கொடுக்கும்!

14