பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பொங்கல் வந்தது சங்கு முழங்குது
தங்கையே எழுந்திரு!

எங்கும் இன்பமே தங்கி நிறைந்தது
தங்கையே எழுந்திரு!

விரும்பித் தின்றிடும் கரும்பும் இருக்குது
விரைந்து நீ ஓடிவா!

அரும்பு மலர்ந்தது போலச் சிரித்துநீ
அன்பேயிங் கோடிவா!

பட்டி லாடைகள் கட்டி மகிழ்ந்துநீ
பறந்திங்கே ஓடிவா!

கட்டி வெல்லமே! சிட்டுக் குருவியே!
கவிதைகள் பாடிவா!

15