பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆசை யோடு பக்த ரெல்லாம்
அணி வகுக்கவே
பூசை வேளை தோறும் கோயில்
மணி யடிக்குதே!

வேலை நேரம் காட்டத் தொழிற்
சாலை தன்னிலே
வேளை தோறும் மணியடிக்குது
காலை மாலையே!

கல்விக் கூடம் திறந்து மூடும்
காலம் காட்டவே
செல்வச் சிறுவர் அறிய மணியின்
ஓசை கேட்குதே!

மணிக்கு மணி கணக்குப் படி
எண்ணிக் காட்டியே
மணியடிக்குது சுவரில் உள்ள
அடிக்கும் மணிப்பொறி!



23