பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாட்ட மின்றி மக்கள்
வாழச் செய்யும் பயிரை
ஊட்டி ஊட்டி வளர்க்கும்
உரம் மிகுந்த வயலே

அன்றொரு நாள் பார்த்தேன்
அத்தனையும் பச்சை!
இன்று வந்து பார்த்தால்
எல்லாம் தங்கம்! தங்கம்!

கொத்துக் கொத்தாய் நெல்லைக்
கொண்டிருக்கும் பயிரே!
பத்தரைப் போல் தரையைப்
பார்த்துக் குனிந்தி ருக்கும்!

பொங்கலுக்கு முன்னே
புத்தரிசி தந்து
எங்கு மின்பம் சேர்த்தே
இன்ப மாக்கும் வயலே!

24