பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




ஊருக் கொரு குளம்-தண்
ணீருக் கொரு குளம்
கோயிலுக் கெதிரே-உள்ள
குடிக்கும் தண்ணீர்க் குளம்

வான மழை பெய்து-மடை
வாயின் வழி ஓடி
மீனுந் துள்ளிக் குதிக்க-நீர்
மிகுந்தி ருக்கும் குளம்

மட்டம் உயரக் கண்டு-ஊர்
மக்கள் உள்ளம் களிக்க
கட்டித் தேக்கி வைத்து-நீரைக்
காக்கும் தெப்பக் குளம்.

29