பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கெங்கும் மரமடர்ந்தே
இருளடர்ந்த வனமே
எல்லோரும் போவதற்குப்
பயமடையும் வனமே

சிங்கம் புலி கரடி இரை
தேடுகின்ற வனமே
சிறுத்தைப்புலி காட்டெருமை
திரிந்திருக்கும் வனமே

குழிமுயலும் கலைமானும்
குள்ளநரி தானும்
கூட்டமாகப் பிளிறிவரும்
யானைகளும் வாழும்

வழி யெல்லாம் சரசரெனப்
பாம்புகளும் ஊரும்
வனமதிலே செல்வதற்குத்
துணிவுமிக வேணும்.

31