பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு குறிப்பு


ஆத்திகுடி, கொன்றை வேந்தன் என்ற இரு நூல்களும் தமிழகத்துக்குக் கிடைத்த பெருஞ் செல்வங்கள். குறிப்பாக இவை குழந்தை யுலகுக்குக் கிடைத்த மூலதனங்கள். புரிந்தோ புரியாமலோ, தமிழ்க் குழந்தைகள் இவ்விரு நூல்களையும் தங்கள் வகுப்புக்களிலே பாராமல் பாடம் பண்ணும் வாய்ப்புக் கிடைத்திருப்பது அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்ததனால் பெற்ற பேரும் பேறே யாகும்.

‘ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போல் அப்படியே நீதிக் கருத்துக்களைக் குழந்தைகளுக்குச் சொல்வது பொருத்தமல்ல' என்று இக்காலத்தில் சிலர் கருதுகிறார்கள். தங்கள் கருத்தைலிவயுறுத்த அவர்கள் ஏதோ சில காரணங்களைக் கூறினாலும் அவை முற்றிலும் பொருத்தமானவையல்ல.

சின்னஞ்சிறு சொற்றொடர்களிலே கூறப்படுகின்ற இந்த நீதிக் கருத்துக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இளநெஞ்சங்களிலே பசுமரத் தாணி போலப் பதிந்து பயன் விளைத்து வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.