பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறஞ்செய விரும்பு


ஊரும் நாடும் வையகமும்
உய்யப் புரியும் செயலெல்லாம்
பேரும் புகழும் சேர்த்தளிக்கும்
பெருமை மிக்க நல்லறமாம்.

பிறரும் வாழ வேண்டுமெனும்
பெரிய எண்ணம் உண்டானால்
அறமும் செய்ய வேண்டுமெனும்
அறிவு பிறக்கும் நெஞ்சகத்தே

தண்ணீர்க் குளங்கள் தோண்டுவதும்
தாழ்ந்தோர்க் குதவி புரிந்திடலும்
எண்ணில் இன்பம் தரும் அறமே
இயன்ற வரையில் செய்வாயே.

38