பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல்வது கரவேல்


உதவி என்று வந்தொருவன் .
உன்னைக் கெஞ்சி நிற்பானேல்
அதனைச் செய்தல் அறமாகும்
அன்பை வளர்க்கும் நெறியாகும்.

முடிந்த அளவு பிறர்க்குதவ
முன்னிற் பதுவே பண்பாகும்
கடிந்து பேசி அனுப்புவதோ
கருணை யற்ற செயலாகும்.

கொடுக்க முடிந்த ஒன்றினையே
கொடுத்தல் உயர்ந்த குணமாகும்
வெடுக்கென் றில்லை எனக்கூறி
விரட்டா திருத்தல் சிறப்பாகும்.

40